News January 23, 2025

மவுனம் காக்கும் திமுக..

image

காங்கிரஸை தொடர்ந்து, சிபிஐ, சிபிஎம், மதிமுக ஆகிய கட்சிகளும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. கடந்தாண்டு கடைசி வரை மவுனம் காத்த DMK, இறுதியில் ஆளுநரின் கருத்தியல் சார்ந்த விஷயங்களில் கருத்துவேறுபாடு இருந்தாலும், அவரது பதவிக்கு மதிப்பளித்து விருந்தில் பங்கேற்பதாக கூறியது. இம்முறையும் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தாலும், DMK விருந்தில் பங்கேற்கும் என்றே கூறப்படுகிறது.

Similar News

News September 18, 2025

நேபாள சூழலை இந்தியாவில் உருவாக்க ராகுல் முயற்சி: பாஜக

image

ராகுல் காந்தி சுமத்தும் <<17748314>>வாக்கு திருட்டு <<>>குற்றச்சாட்டு ஆதாரமற்றது என அனுராக் தாக்குர் கூறியுள்ளார். ஜனநாயக அமைப்புகளுக்கு எதிராக கேள்வி எழுப்புவதன் மூலம் வங்கதேசம், நேபாளத்தில் ஏற்பட்ட நிலைமையை இந்தியாவிலும் ராகுல் உருவாக்க முயற்சிப்பதாக அவர் சாடியுள்ளார். மேலும், தேர்தல் தோல்வி எதிரொலியாக விரக்தியில் பேசும் ராகுல், இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

News September 18, 2025

நேபாளத்துக்கு இந்தியா உதவும்: PM மோடி

image

நேபாள இடைக்கால பிரதமர் சுசிலா கார்கியுடன், PM மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, சமீபத்தில் நடந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த மோடி, நேபாளத்தில் மீண்டும் அமைதி திரும்புவதற்கும், நிலைத்தன்மை உண்டாவதற்கும் தேவையான ஆதரவை இந்தியா வழங்கும் என உறுதியளித்துள்ளார். முன்னதாக, SM-களுக்கு தடை, ஊழலுக்கு எதிர்ப்பு ஆகியவற்றிற்காக Gen Z தலைமுறையினர் போராட்டம் நடத்தினர்.

News September 18, 2025

மருத்துவமனையில் நடிகர் ரோபோ சங்கர்.. HEALTH UPDATE

image

நடிகர் ரோபோ சங்கர் சுயநினைவுடன் இருப்பதாக அவரது மகள் இந்திரஜா கூறியுள்ளார். நேற்று ஷூட்டிங்கின்போது திடீரென மயங்கி விழுந்த ரோபோ சங்கர், தனியார் ஹாஸ்பிடல் ஒன்றில் ICU-வில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் பரவியது. இதனிடையே, மயக்கத்திற்கு LOW BP தான் காரணம் எனவும் தனது தந்தை விரைவில் வீடு திரும்புவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!