News May 17, 2024
மழை சீசன்: கவனமாக பஸ்களை இயக்க அறிவுறுத்தல்

திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்று முன் தினம் (மே 15) இரவு வள்ளியூர் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் தேங்கிய மழை நீரை அரசு பஸ் ஒன்று சிக்கியது. இந்த நிலையில் தரைப்பாலம், சுரங்க பாலம், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கினால் மாற்றுப்பாதையில் பஸ்களை இயக்க வேண்டும் என ஓட்டுநர்களுக்கு எஸ்இடிசி அறிவுறுத்தி உள்ளது.
Similar News
News October 31, 2025
நெல்லை: நவம்பர் மாதம் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் படி நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 65 வயது கடந்தவர்கள், மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டைதாரருக்கு வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறத. நவம்பர் மாதத்திற்கான இந்த சிறப்பு நிகழ்ச்சி வருகிற 3 மற்றும் 4ம் தேதிகளில் நடைபெறும். இதை தகுதி உள்ள குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
News October 31, 2025
படைப்புழு தாக்குதல் கட்டுப்படுத்த ஆலோசனை

நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பூவண்ணன் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு : நெல்லை மாவட்டத்தில் ஆயிரம் பெற்றேன் பரப்பளவில் மக்காச்சோளம் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கன் படைப்புழு பூச்சி தாக்கம் இருப்பதால் மகசூல் இழப்பீடு அதிகமாக இருக்கும். எனவே இதை தவிர்க்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஆழமாக நிலத்தை உழ வேண்டும். கடைசி உழவின் போது வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும் என தெரிவித்துள்ளார்.
News October 31, 2025
நெல்லை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க


