News May 18, 2024

மழையால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

image

குமரி மாவட்டத்தில் மே-19 வரை கனமழை தொடரும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வரும் மாவட்ட நிர்வாகம் மீனவர்கள் யாரும் கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கையை ஏற்று குளச்சல், கடியபட்டணம், முட்டம், தேங்காபட்டணம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் எவரும் நேற்று மீன் பிடிக்க செல்லவில்லை.

Similar News

News April 19, 2025

உயிரிழந்த 22 மாணவ மாணவிகளுக்கு அதிமுக அஞ்சலி

image

நீட் ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக பொய் கூறி ஆட்சிக்கு வந்ததாக திமுக அரசை கண்டித்தும், நீட் தேர்வால் இன்னுயிரை இழந்த 22 மாணவ, மாணவிகளுக்கு இன்று மாலை (19.4.2025) நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் அருகில் திமுக மாணவர் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய் சுந்தரம் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

News April 19, 2025

தஞ்சையில் இருந்து 1250 டன் ரேஷன் அரிசி வருகை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக இன்று தஞ்சாவூரில் இருந்து 1,250 டன் ரேசன் அரிசி, சரக்கு ரயில் மூலம் நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து லாரிகள் மூலம், அரிசி, பள்ளி விளையில் உள்ள மத்திய அரசின் உணவுபொருள் சேமிப்பு திட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இருப்பு வைக்கப்பட்டது.

News April 19, 2025

கண்டித்த சூப்பர்வைசரை பிளேடால் வெட்டிய ஊழியர்

image

எறும்புக்கோட்டையைச் சேர்ந்த அபுதாகிர்(42), வலை கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவரது கம்பெனியில் அமரேஷ்வர் சுவைன் வேலை பார்த்து வந்த நிலையில், அவர் படம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை அபுதாகிர் கண்டித்ததால், அபுதாகிரை, அமரேஷ்வர் பிளேடால் வெட்டி, கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின்பேரில், ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!