News April 7, 2025

மழையால் சேதமான மின் வயரை மிதித்த 6 வயது சிறுவன் பலி

image

சீதபற்பநல்லூர் சேர்ந்த முத்து என்பவரது மகன் மாதேஷ் வயது 6. இவர் அங்கன்வாடியில் படித்து வருகிறார். நேற்று சூறைக்காற்றுடன் பெய்த மழையில் மின்கம்பங்கள் விழுந்தன. இன்று காலை அதே பகுதியில் நடந்து சென்ற மாதேஷ் மின் வயரில் மிதித்து விட மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தான். சீதபற்பநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 27, 2025

கவின் கொலை வழக்கு காணொளி காட்சி மூலம் விசாரணை

image

கவின் கொலை வழக்கில் சுர்ஜித் அவருடைய தந்தை சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் ஜெயபால் ஆகியோர் இன்று நெல்லை இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் (தீண்டாமை தடுப்பு) ஆஜர் படுத்தப்படுவதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு கருதி 3 பேரும் வீடியோ கான்பரசிங் காணொளி காட்சி மூலம் நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு வேறு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

News August 26, 2025

நெல்லை ஆம்னி பேருந்தில் அதிக கட்டணமா??

image

நாளை விநாயகர் சதுர்த்தியை கொண்டாட நெல்லை மக்களே உங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வெளியூரில் இருந்து புறபட்டு இருப்பீர்கள்! சொந்த ஊர்க்கு புறபட்ட உங்களுக்கு ஆம்னி பேருந்தின் கட்டண உயர்வு அதர்ச்சியை கொடுக்கிறதா? ஆம்னி பேருந்தின் கட்டணம் அதிகம் வசூலித்தால் 9043379664 எண்ணில் ஆதாரத்துடன் புகாரளியுங்க… (குறிப்பு: நீங்கள் சொந்த ஊரில் இருந்து வெளியூர் திரும்பும் போது இந்த எண் பயன்படும்) SHARE பண்ணுங்க!

News August 26, 2025

நெல்லை: விநாயகரை வரவேற்கும் 6 படிகள்!

image

நெல்லை மக்களே! நாளை விநாயகர்சதுர்த்தி அன்று செய்ய வேண்டியவை
1. வீட்டை சுத்தம் செய்யுங்க.
2. விநாயகர் சிலையை நிறுவுங்க.
3. பூ,மாவிலையால் அலங்காரம்.
4. ஓம் ஸ்ரீ கணேஷாய நமஹ – மந்திரத்தை 108 முறை சொல்லுங்க.
5. கொழுக்கட்டை, சுண்டல் முதலிய நைவேதியம்.
6. தீபம், கற்பூரம் காட்டி ஆரத்தி
குடும்பத்துடன் சென்று மணி மூர்த்தீஸ்வரர் உச்சிஷ்ட விநாயகர் மற்றும் பாக்கிய விநாயகர் கோவில் சென்று தரிசனம் செய்யுங்க. ஷேர்

error: Content is protected !!