News October 13, 2024

மல்யுத்தபோட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்

image

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மஹாலில் நேற்று நடைபெற்ற மாநில அளவிலான கை மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு கள்ளக்குறிச்சி நகர மன்ற தலைவர் சுப்புராயலு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகையினை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு கை மல்யுத்த சங்கத்தின் மாநில செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News September 9, 2025

கள்ளக்குறிச்சி: மின் தடையா…? இதை பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 9498794987என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE

News September 9, 2025

கள்ளக்குறிச்சி: டிகிரி படித்திருந்தால் 1,25,000 வரை சம்பளம்

image

கள்ளக்குறிச்சி மக்களே மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்ரேஷன் நிறுவனம், (கள பொறியாளர்) போல பதவிகளுக்கு 1,543 காலிப்பணியிடங்கள் அறிவித்துள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 18வயதுக்கு மேல் இருந்து ENGINEERING அல்லது DILPLOMO ELECTRICAL முடித்திருக்க வேண்டும். எழுத்து வடிவில் தேர்வும் உண்டு இந்த பணிக்கு 1,25,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம் ஷேர்.

News September 9, 2025

கள்ளக்குறிச்சி: கார் மோதி முதியவர் பலி

image

மடப்பட்டு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று 60 மதிக்கத்தக்க முதியவர் சாலையை கடந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. அவ்விபத்தில் முதியவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மடப்பட்டு வி.ஏ.ஓ. சவரிநாதன் அளித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!