News October 18, 2024

மலை ரயில் 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் இயக்கம்

image

நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கையாக அக்.16, 17 ஆகிய தேதிகளில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட நிலையில் மேட்டுப்பாளையம்- உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் இன்று தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Similar News

News July 9, 2025

கோவை: பிக் பாக்கெட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது

image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முந்தினம் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனத்திற்கு பின், பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது, அவரை வரவேற்க காத்திருந்த 4 பேரிடம் ரூ.2.07 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் பிக் பாக்கெட் அடித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் நேற்று ராஜி, ராஜா@குண்டு ராஜன், சுரேஷ், ரமேஷ், கோபால், அருள்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

News July 8, 2025

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (08.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News July 8, 2025

உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோயில்!

image

கோவை உக்கடத்தில் புகழ்பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் நரசிம்மரை, பிரதோஷ நாளான இன்று, பால், இளநீர், பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனப்பொடி, பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தும், துளிசி மாலை சாத்தியும் வழிபட்டால், தீராத கடன் தொல்லைகள் தீருமாம். கடன் தொல்லையில் சிக்கியுள்ள உங்கள் நண்பர்களுக்கு இத SHARE பண்ணுங்க.

error: Content is protected !!