News October 20, 2024
மறைமலை நகர் டாஸ்மாக் கடையில் தீ விபத்து

மறைமலை நகர் அண்ணா சாலையில் உள்ள அரசு மதுபானக்கடையில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. கடையிலிருந்து புகை வருவதைக் கண்டு மறைமலை நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். ஃப்ரிஜில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிந்தது. இச்சம்பவம் குறித்து மறைமலை நகர் போலிசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 14, 2025
மகளிர் உரிமைத்தொகை: இந்த 5 ஆவணங்கள் போதும்!

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. <
News August 14, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி விவரம்

செங்கல்பட்டு மாவட்டம் (13/08/25) இன்று செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
News August 14, 2025
கோவளத்தில் வாட்டர் மெட்ரோ வரப்போகிறது

கொச்சியை போல சென்னை கோவளத்தில் வாட்டர் மெட்ரோ கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
நீர்வளத் துறை (WRD) வாட்டர் மெட்ரோவை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இதன் முதல்கட்டமாக கூவம் நேப்பியர் பாலம் மற்றும் கோவளம் இடையேயான பக்கிங்ஹாம் கால்வாயை மீட்டெடுத்து தூர்வாரப்படும். என தமிழக அரசு தெரிவித்துள்ளது.