News September 9, 2025
மறைமலை நகரில் உயிர் நண்பன் மீது கொலை வெறி தாக்குதல்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், தீர்த்தகிரி என்ற இளைஞர் தனது உயிர் நண்பரான தயாநிதியை சுத்தியலால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த தயாநிதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தையடுத்து போலீசார் தீர்த்தகிரியை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News March 9, 2026
செங்கல்பட்டில் 250 கோழிகள் இலவசம்!

செங்கல்பட்டு மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News March 9, 2026
BREAKING: செங்கல்பட்டில் இரட்டை படுகொலை

பல்லாவரம் அருகே திரிசூலம் பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ஆறுமுகம் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரை இன்று அதிகாலை அடையாளம் தெரியாத கும்பல் வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது. சம்பவ இடத்திற்கு வந்த பல்லாவரம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரட்டை கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News March 9, 2026
செங்கல்பட்டு: BE/B.tech முடித்தவர்களா நீங்கள்?

செங்கல்பட்டு மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


