News September 11, 2025
மறைமலைநகர் அருகே சிறுவனுக்கு சூடு வைத்த கொடூரம்

மறைமலைநகர் பகுதியில் வசிக்கும் 11 வயது சிறுவனுக்கு சூடு வைத்து சித்ரவதை செய்யப்படுவதாக, மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று, போலீசார் விசாரித்தனர். இதில், சிறுவனின் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சிறுவனின் தந்தையும், சித்தியும் சேர்ந்து, சிறுவனை தாக்கி, உடலில் பல்வேறு இடங்களில் சூடு வைத்தது தெரிந்தது.
Similar News
News September 11, 2025
செங்கல்பட்டு: தமிழ் தெரிந்தாலே.. ரூ.80,000 வரை சம்பளம்

▶️கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ▶️18 முதல் 28 வயது உள்ளவர் விண்ணப்பிக்கலாம். ▶️ஏதேனும் ஒரு டிகிரி போதும். ▶️தமிழ் தெரிந்திருக்க வேண்டும். ▶️சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை. ▶️ https://www.ibps.in/என்ற இணையதளத்தில் செப்.21க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ▶️பணிக்கான தேர்வு நவம்பர் (அ) டிசம்பரில் நடைபெறும். ▶️மேலும் தகவலுக்கு கிளிக் பண்ணுங்க.
News September 11, 2025
செங்கல்பட்டில் வேலை வேண்டுமா? இங்கு போங்க

செங்கல்பட்டு அடுத்த ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் வரும் செப்.13-ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார். இதில், 10th, 12th, டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு, 044- 2742 6020, 94868 70577 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். (வேலை தேடுபவர்களுக்கு SHARE)
News September 11, 2025
செங்கல்பட்டு: இதை செய்தால் பணம் போகும்! உஷார்

செங்கல்பட்டு சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே உஷாராக இருக்க வேண்டும் என்றனர். (SHARE பண்ணுங்க)