News May 30, 2024
மறைந்த பத்திரிகையாளருக்கு அஞ்சலி

கோவையில் தனியார் பத்திரிக்கை புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்தவர் அஜய் ஜோசப். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சி பகுதியில் வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது நாய் ஒன்று குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி நேற்று உயிரிழந்தார். இந்நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட பத்திரிக்கையாளர்கள், அஞ்சலி செலுத்தினர்.
Similar News
News August 14, 2025
வேரில் உதித்த சுதந்திரப் போராட்டத் தலைவர்கள்

கோயம்புத்தூர், குனியமுத்தூரைச் சேர்ந்த 55 வயது யூ.எம்.டி. ராஜா, காந்திபுரத்தில் நகை பட்டறை நடத்தி வரும் ஒரு கலைஞர். இவர், சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக ஒரு தனித்துவமான கலைப்படைப்பை உருவாக்கியுள்ளார். ஒரு மரத்தின் ஆணிவேரைக் கொண்டு, அதில் நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட 20 முக்கியத் தலைவர்களின் உருவப்படங்களை மிக நுட்பமாகச் செதுக்கியுள்ளார்.
News August 14, 2025
ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை

கோயம்புத்தூர் மாவட்டம், சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ராஜன் குமார், ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி அதிகப்படியான பணத்தை இழந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கும், விரக்திக்கும் ஆளான அவர், நேற்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் குறித்து பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News August 14, 2025
கோவை மாநகராட்சியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை (14.08.2025) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெற உள்ள இடங்கள் குறித்து மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 1.கிழக்கு மண்டலம் வார்டு எண் 5, இடம் -பங்காரு திருமண மண்டபம், 2.மேற்கு மேற்கு மண்டலம் (வார்டு எண் 17 & 33) இடம் -சுஹிதா மஹால் திருமண மண்டபம், டி.வி.எஸ் நகர் கவுண்டம்பாளையம்.