News December 7, 2024

மறுசுழற்சி ஆலமரம் மக்கள் பார்வைக்கு அர்ப்பணிப்பு

image

புதுச்சேரி கடற்கரை சாலையில் தேசிய மரமான ஆலமரம் 700 கிலோ மறுசுழற்சி இரும்பினால் உருவாக்கி பொதுமக்களின் பார்வைக்காக மூன்று நாள் கண்காட்சியாக நேற்று முதல் வைக்கப்பட்டுள்ளது. இதனை, அமைச்சர் லட்சுமிநாராயணன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கலியபெருமாள், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

Similar News

News September 12, 2025

டென்னிஸ் விளையாடிய முதக்வர் ரங்கசாமி

image

புதுச்சேரியில் அகில இந்திய அளவிலான டென்னிஸ் போட்டி இன்று கோரிமேடு என்.ஆர் டென்னிஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி டென்னிஸ் விளையாடி போட்டியினை தொடங்கி வைத்தார். மேலும் போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகள் முதலமைச்சர் ரங்கசாமிக்கு பூங்கொத்துக்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

News September 12, 2025

புதுவை EX CM பொய் பேசுவதை நிறுத்த வேண்டும்!

image

புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், EX CM நாராயணசாமியின் தவறான பொய் குற்றச்சாட்டுகளுக்கு அரசின் சார்பில் பதில் அளிக்காததால், தொடர்ந்து பொய் பேசுவதையே வழக்கமாக நாராயணசாமி கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. தனது 5ஆண்டு கால திமுக.காங் கூட்டணி ஆட்சியையும் தற்போதைய தேசிய ஜனநாயக ஆட்சியையும் நாராயணசாமி ஒப்பிட்டு பார்த்துக் கொள்வது நல்லது என தெரிவித்துள்ளார்.

News September 12, 2025

அடாக் அடிப்படையில் 3 பிசிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

image

புதுச்சேரியை சேர்ந்த 3 பிசிஎஸ் அதிகாரிகளுக்கு என்ட்ரி கிரேடில் அடாக் அடிப்படையில் பதவி அளித்து, துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிசி எஸ் அதிகாரிகள் அர்ஜூன் ராமகிருஷ்ணன், ஆதிதிராவிடர் நலத் துறை இயக்குநராகவும், முரளிதரன் சுற்றுலா துறை இயக்குநராகவும், மோகன்குமார் மாகே மண்டல நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவினை கவர்னரின் ஆணைப்படி சார்பு செயலர் ஜெய் சங்கர் பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!