News February 27, 2025

மறவநேந்தல்: தீயில் எரிந்து குடிசை வீடு சேதம்

image

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே மறவநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரது குடும்பத்தினர் குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில், நேற்று வீட்டிலிருந்த மண்ணெண்ணெய் விலக்கு சாய்ந்து குடிசை வீடு பற்றி எரிந்து முழுவதுமாக சேதமானது. இந்நிலையில் வீட்டை இழந்த குடும்பத்திற்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு உடனடியாக வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News March 4, 2026

புதுகை: விருது பெற விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

புதுகை மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் 15 கலைஞர்களுக்கு விருது வழங்க கலெக்டர் தலைமையில் தேர்வு குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. பாட்டு, பரதநாட்டியம், ஓவியம், கும்மி உள்ளிட்ட கலைஞரிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. 18-65 வயது உடையோர் மார்ச் 30க்குள் உதவி இயக்குனர் கலை பண்பாட்டு மையம் ஸ்ரீரங்கம் திருச்சி-6 விண்ணப்பிக்க கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.

News March 3, 2026

புதுக்கோட்டை: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

image

புதுக்கோட்டை மக்களே, <>இங்கு க்ளிக் செய்து <<>>தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 3, 2026

BREAKING புதுகை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

புதுக்கோட்டை திருவப்பூரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழா வரும் மார்ச்.9-ம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. அதனை ஈடுசெய்யும் வகையில் மார்ச்.14-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!