News March 7, 2025
மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழப்பு

நங்கவள்ளி அருகே சாணாரப்பட்டி ஊராட்சி கூலிக்காட்டை சேர்ந்தவர் பழனி. இவர் 8 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டின் அருகில் 8 ஆடுகளையும் கட்டி வைத்து இருந்தார். அதிகாலை ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு பழனி எழுந்து வந்து பார்த்தார். அப்போது மர்ம விலங்கு கடித்து குதறியதில் 3 ஆடுகள் செத்து கிடந்தன. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 16, 2025
வீராணம் விவசாயியிடம் வழிபறி; எட்டு பேர் அதிரடி கைது!

வீராணம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட பூவனூர் அருகே நேற்று மாலை மணிகண்டன் என்பவர் தனது தோட்டத்தில் பால் எடுத்துக்கொண்டு வரும்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை தாக்கி விட்டு அவருடைய செல்போன் பறித்து சென்றனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசர் சரவணன்(28), சீனிவாசன், மாதங்கிதாசன்(26), மணிகண்டன்(24), ராம் குமார் (27) சுராஜ் பர்வேஸ் (19), கார்கில் (23) , விஷ்வா(20) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
News November 15, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (நவ.15) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News November 15, 2025
சேலம்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க


