News February 25, 2025
மருத்துவ மாணவரின் பெற்றோருக்கு ரூ.1 கோடி இழப்பீடு

வேலூரை சேர்ந்தவர் சஞ்சீவ்குமார் ,புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 3-ம் ஆண்டு படித்து வந்தார்,கடந்த 2022ம் ஆண்டு புதுச்சேரி ஊசுட்டேரி அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இவரது தந்தை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை தொடர்ந்து நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி இழப்பீடாக ரூ.1 கோடியே 12 லட்சத்து 53 ஆயிரம் வழங்க ஆணையிட்டார்.
Similar News
News March 3, 2026
வேலூர்: மனஉளைச்சலில் விவசாயி எடுத்த முடிவு!

வேலூர்: ஊசூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (42), விவசாயி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்த சுரேஷ் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக் காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
News March 3, 2026
வேலூர் தீப்பற்றி எரிந்த கோட்டை பூங்கா

வேலூர் மாவட்டம் பிரசித்தி பெற்ற கோட்டையை சுற்றி அகழி மற்றும் பூங்கா உள்ளது. பூங்காவில் நேற்று (மார்ச் 02) மர்ம நபர்கள் வைத்த தீயில் பூங்காவில் உள்ள செடி கொடிகள் மற்றும் புற்கள் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
News March 3, 2026
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


