News October 8, 2024
மருத்துவமனையில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதுார் சிவன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த பழனி (60) – மனைவி அலமேலு (45) தம்பதியினரின் 4 வயது மகன் ருத்ர பிரசாத், தலையில் எலும்பு வீக்கம் மற்றும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். நேற்று முன்தினம் வார்டில் தாவி குதித்து, விளையாடியபோது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது, சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
Similar News
News December 11, 2025
BREAKING: காஞ்சி மாவட்ட நீதிபதி பணியிடை நீக்கம்!

காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக கைது நடவடிக்கை உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு பிறகு நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பிறப்பித்துள்ளார்.
News December 11, 2025
காஞ்சிபுரம்: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் <
News December 11, 2025
காஞ்சிபுரம்: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!


