News June 12, 2024
மருத்துவமனையில் அடிக்கடி ஏற்படும் பழுது

திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் வசதிக்காக மூன்று மின் தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மின் தூக்கி அடிக்கடி பழுது ஏற்படுவதால் மீதமுள்ள இரண்டு மின் தூக்கி மட்டுமே செயல்பட்டு வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர். இதை சரி செய்ய பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News July 8, 2025
நெல்லை மக்களின் மனதில் நீங்காத காந்திமதி

நெல்லையில் இன்று தேரோட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மகிழ்ச்சியுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியில் திளைத்த போதிலும், அவர்களின் மனதில் நெருடலாக இருந்த பெயர் “காந்திமதி”. நெல்லை மக்கள் முதன்முறையாக காந்திமதி யானை இல்லாமல் இந்த தேரோட்டத்தினை நிகழ்த்தியுள்ளனர். நெல்லை மக்களின் நினைவில் இன்றும் காந்திமதி யானை உயிர்புடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது. *ஷேர்
News July 8, 2025
நெல்லை: பாங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு

நெல்லை: பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் உள்ளூர் வங்கி அலுவலர் (Local Bank Officer) பணிக்காக தமிழகத்திற்கு 60 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 24ம் தேதி கடைசி நாளாகும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும். நெல்லையில் தேர்வு நடைபெறுகிறது. விண்ணப்பிக்க இங்கே <
News July 8, 2025
நெல்லை மாநகரில் 21ஆம் தேதி வரை போலீஸ் தடை உத்தரவு

திருநெல்வேலி மாநகரில் இன்று நள்ளிரவு முதல் ஜூலை 21, 2025 வரை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, அனுமதியின்றி பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், தர்ணா, ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது அமைதி மற்றும் மக்கள் நலன் கருதி இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.