News August 31, 2025

மருத்துவத்துறையில் காலிப் பணியிடங்கள்: பணிகள் முடக்கம்.

image

விழுப்புரம் உட்பட ஆறு மாவட்டங்களில், சுகாதாரத்துறை இணை இயக்குநர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். உதவியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், அலுவலகக் கண்காணிப்பாளர்கள், தட்டச்சர்கள் மற்றும் ஓட்டுநர்கள் போன்ற பணியிடங்கள் காலியாக இருப்பதால், சுகாதார மற்றும் ஊரகப் பணிகள் ஆய்வு முடங்கிப் போயுள்ளன. எனவே, இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என மருத்துவப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News September 3, 2025

விழுப்புரம்: B.Sc, B.C.A, M.Sc படித்தவர்களுக்கு உள்ளூரில் அரசு வேலை

image

விழுப்புரம் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில், தகவல் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.Sc, B.Sc. IT, B.C.A, M.Sc, படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும். உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பத்தை பதிவிறக்க செய்து வரும் செ.22க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News September 3, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப்.3) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்

▶️ மயிலம்
▶️ அய்யன்கோயில்பட்டு, கோலியனூர்
▶️ அருங்குறுக்கை, திருவெண்ணெய்நல்லூர்
▶️ முகையூர்
▶️ நடுக்குப்பம், கோட்டக்குப்பம்
▶️ அனந்தபுரம்
பொதுமக்கள் நேரில் சென்று மனு அளித்து பயன்பெறலாம்

News September 3, 2025

தாம்பரம் – விழுப்புரம் ரயில் சேவை பகுதியாக ரத்து.

image

பராமரிப்புப் பணிகள் காரணமாக, தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்கு விழுப்புரம் செல்லும் மெமு ரயில் செப்டம்பர் 6, 9, 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் முண்டியப்பாக்கத்துடன் நிறுத்தப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதே நாள்களில், விழுப்புரத்திலிருந்து நண்பகல் 1.40 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மெமு ரயில் விழுப்புரம் என்பதற்குப் பதிலாக முண்டியப்பாக்கத்திலிருந்து புறப்படும்.

error: Content is protected !!