News February 8, 2025
மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

கீழ்அம்பி பகுதியை சேர்ந்த பிரியா (20), சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர், கோகுல் என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். கோகுலுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல் கடந்த 5ஆம் தேதி தகராறு ஏற்பட, ஆத்திரமடைந்த பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Similar News
News August 24, 2025
கஞ்சா விற்ற 3 பேர் கைது

காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை அருகே கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முஸ்தபா, இம்தியால், ஹேமநாதன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
News August 24, 2025
காஞ்சிபுரம்: மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு அடையாள அட்டை!

ஸ்ரீபெரும்புதூரிலுள்ள தனியார் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் இன்று (ஆகஸ்ட் 23) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கலைசெல்வி மோகன் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்வில் திருப்பெரும்புதூர் சார் ஆட்சியர் ந.மிருநாலினி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் எம்.ஹிலாரினா, ஜோஷிடா நளினி, மாவட்ட சுகாதார அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
News August 23, 2025
காஞ்சிபுரத்தில் இந்த இடங்களை எல்லாம் நோட் பண்ணிக்கோங்க!

கோயில் நகரமான காஞ்சி மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களை இங்கு காணலாம். ▶உத்திரமேரூர் கேதாரீஸ்வரர் கோயில் ▶ஊத்துக்காடு மகாலிங்கேசுவரர் கோயில் ▶ஏகனாம்பேட்டை திருவாலீஸ்வரர் கோயில் ▶காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் ▶கோவூர் சுந்தரேஸ்வரர் கோயில் ▶கோனேரிக்குப்பம் வீரட்டானேசுவரர் கோயில் ▶குன்றத்தூர் கந்தழீஸ்வரர் கோயில் ▶பனையூர் சிதம்பரேஸ்வரர் கோயில் ▶திருப்புலிவனம் வியாக்ரபுரீசுவரர் கோயில். ஷேர் பண்ணுங்க!