News September 25, 2024

மருதமலை முருகன் கோயில் செல்வதற்கு கட்டுப்பாடு

image

கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோயில் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையில் காரில் செல்ல அனுமதி. காலை 7 மணிக்கு மேல் மாலை 5 மணி வரை மட்டுமே இரு சக்கர வாகனத்தில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் சாலை வழியாக மலைக்கு நடந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News August 5, 2025

கோவை: தேர்வில்லாமல் ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

image

கோவை மக்களே, தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் “TN Rights” திட்டத்தின் கீழ் பணிபுரிய உதவியாளர், தட்டச்சர், சீனியர் கணக்காளர் உள்ளிட்ட 25 பதவிகளுக்கு தேர்வில்லாமல் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 13.08.2025 ஆகும். SHARE IT!

News August 5, 2025

கோவையில் நூதன முறையில் மோசடி!

image

கோவை சிவானந்தபுரம் வேல்முருகன் நகரை சேர்ந்தவர் காயத்ரி (29). இவரிடம் 50 வயது பெண் நட்பு ரீதியாக பழகி வந்தார். நேற்று இந்த பெண் காயத்ரியிடம் 9cm நீளம் 6cm அகலத்தில் ஒரு கட்டியை தங்க கட்டி என தந்து, அதை விற்று தரும்படி கூறி 3½ பவுன் தங்கச் செயினை வாங்கிச் ஏமாற்றி சென்றார். பின் காயத்ரியன் கணவர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.

News August 5, 2025

கோவை: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

கோவையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!