News March 2, 2025
மரம் முறிந்து விழுந்து தம்பதி பரிதாப பலி

மணப்பாக்கத்தைச் சேர்ந்த சுதர்சன் (40) – புனிதா (37) தம்பதியர், திருச்சி லால்குடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். நேற்று (மார்.1) அங்கிருந்து ஸ்ரீரங்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, மேலவாளாடி அருகே சாலையோரம் இருந்த ஒரு நாவல் மரம் முறிந்து அவர்கள் சென்ற பைக் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
Similar News
News April 6, 2026
சென்னை: IDBI வங்கியில் வேலை!

சென்னை மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <
News April 6, 2026
சென்னையில் விஜய்யின் பரப்புரை மீண்டும் ரத்து

சென்னை வில்லிவாக்கம், தி.நகர் ஆகிய தொகுதிகளில் தமிழக வெற்றி கழக தலைவர் இன்று பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால், காவல் துறை தரப்பில் வில்லிவாக்கத்தில் இருந்து 1 மணிநேரத்திற்குள் தி.நகருக்கு செல்வதற்கு நிபந்தனை வைத்தது. அதனை நிறைவேற்ற முடியாது என்கிற காரணத்தால் விஜய்யின் தேர்தல் பரப்புரை மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News April 6, 2026
சென்னை: தூக்கில் தொங்கிய மாணவி!

சென்னை ஆலப்பாக்கம் பகுதியில் 17 வயது கல்லூரி மாணவி லேகா ஸ்ரீ வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்தார். மதியம் மேல்மாடிக்கு சென்ற அவர் நீண்ட நேரமாக வராததால், பெற்றோர் கதவை உடைத்து பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். நண்பரிடம் கொடுத்த தங்க நகை திரும்ப கிடைக்காததால் மனஅழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. *தற்கொலை எதற்கும் தீர்வல்ல*


