News March 18, 2025
மரணத்திலும் இணை பிரியாத தம்பதி

சென்னை கே.கே.நகரில் கணவன் உயிரிழந்த சில நிமிடங்களில் மனைவியும் உயிரிழந்தார். ஜீவானந்தம் தெருவில் மூர்த்தியும் (72) அவரது மனைவி (61) சாந்தியும் தனியாக வசித்து வந்தனர். கணவன் சுயநினைவின்றி மூர்ச்சையானதால் பக்கத்து தெருவில் வசிக்கும் மருமகன் கார்த்திக்கு சாந்தி தகவல் அளித்துள்ளார். அவர் வந்து பார்க்கும் போது கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது.இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News March 22, 2025
சென்னையில் இன்று இரவு காவல் ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 21, 2025
வரத்தை வாரி வழங்கும் காளிகாம்பாள்

சென்னை ஜார்ஜ் டவுனில் பிரசித்தி பெற்ற காளிகாம்பாள் கோவில் உள்ளது. காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு பஞ்ச பூத ஸ்தலங்களுக்கு உண்டான சம புனிதத்தன்மை இக்கோயிலுக்கும் உண்டு. மேலும், இந்த குழந்தை வரம், திருமண வரம் போன்ற வேண்டிய வரத்தை அள்ளிக்கொடுக்கும் அம்மனாக உள்ளார். உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கவும் பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகிறாரகள். ஷேர் பண்ணுங்க.
News March 21, 2025
சென்னையில் இந்த உணவுகளை மிஸ் பண்ணாதீங்க!

1.பர்மா உணவுகள், வடா பாவ் (பாரிஸ் கார்னர்), 2. கெபாப், இப்தார் உணவுகள் (மண்ணடி), 3. பீப் கடாய் ரோஸ்ட் (தாஷ மக்கான் தெரு), 4. பன் பட்டர் ஜாம் (மவுண்ட் ரோடு), 5.சாட், சமோசா, ஜிலேபி (சௌகார்பேட்டை), 6.மீன் வருவல்கள், மரீனா பீச் (லூப் சாலை), 7.சாண்ட்விச், பிரட் ஓம்லெட்- ரெட் கிராஸ் ரோடு, எழும்பூர். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.