News January 20, 2025

மயிலாடுதுறை: 3 மதுபான கூடங்களுக்கு சீல் வைப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் நடத்திய சோதனையில் அனுமதியின்றி இயங்கிய 3 மதுபான கூடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதுடன், 11 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில், உரிமம் பெறாமல் இயங்கி வரும் மதுபானக்கூடங்களை உடனடியாக மூடாவிட்டால் கைது மற்றும் சீல் நடவடிக்கை தொடரும் என்றும் மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News April 21, 2025

மயிலாடுதுறையில் வேலை வாய்ப்பு

image

மயிலாடுதுறையில உள்ள தனியார் நிறுவனத்தில் FIELD MANAGER பணிக்கான 42 காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.15,000 முதல் 25,000 வரை வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பு முடித்துவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்யுங்கள்

News April 21, 2025

அரசு பேருந்து நடத்துனர், ஓட்டுநர் வேலை வாய்ப்பு

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இன்றைக்குள் (ஏப்.21) இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவேண்டும். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 21, 2025

கர்ப்பிணியை தாக்கிய கணவர் கைது

image

மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி – ஜெயலட்சுமி தம்பதியினர். ஜெயலட்சுமி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் கிருஷ்ணமூர்த்தி மது அருந்திவிட்டு பிரச்சனை செய்ததால் பெற்றோர்கள் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் ஜெயலட்சுமியிடம் சமாதானம் பேசி வரச்சொல்லியபொழுது கிருஷ்ணமூர்த்தி தாக்கியுள்ளார். இதையடுத்து ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் காவல்துறை கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தது.

error: Content is protected !!