News October 5, 2025
மயிலாடுதுறை: 20 கிலோ புகையிலை பறிமுதல்

சீர்காழி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்த ரிஸ்வான் (21) என்பவர் தனது ஸ்கூட்டரில் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சீர்காழி போலீசார் அவரை பிடித்து சோதனை செய்தனர். இதில் அவர் தடை செய்யப்பட்ட 20 கிலோ புகையிலை பொருட் களை விற்பனைக்காக கடத்தி சென்றது தெரிய வந்தது. இதைடுத்து அவரை காவல்துறை கைது செய்தனர்.
Similar News
News October 16, 2025
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆய்வு

மயிலாடுதுறை அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். மேலும் மருத்துவர்கள் செவிலியர்கள் வருகை பதிவேடுகளை பார்வையிட்டு மருந்து மாத்திரை கையிருப்பு விவரங்களை கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
News October 16, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அறிவிப்பு

மயிலாடுதுறை காவல்துறை செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. இதில் ஆன்லைன் விளையாட்டில் உங்கள் நேரத்தையும் பணத்தையும் இழக்க வேண்டாம். இணையத்தில் உங்களின் பணத்தை பறிக்க பல போலியான ஆன்லைன் விளையாட்டுக்கள் உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருக்கவும் என தெரிவிக்கபட்டது. மேலும் தகவல்களுக்கு Cyber Crime Help Line: 1930 எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் அல்லது www.cybercrime.gov.in இணையத்தளம் வாயிலாக புகாரளிக்கலாம்.
News October 16, 2025
மயிலாடுதுறை: 2 கிலோ குட்கா பறிமுதல்

மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி உத்தரவின்படி போலீசார் மாவட்டம் முழுவதும் சட்டவிரோத குட்கா விற்பனை மற்றும் கடத்தல் குறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு மயிலாடுதுறை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டதில் 2கி குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த மயிலாடுதுறை பொட்டவெளி தெருவை சேர்ந்த பிரசாந்த் 35 என்பவரை கைது செய்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.