News January 8, 2026

மயிலாடுதுறை: வாய்க்காலில் இறந்து கிடந்த வாலிபர்

image

செம்பனார்கோயில் அருகே குளிச்சாறு பகுதியில் உள்ள வாய்க்காலில் நேற்று முன்தினம் இரவு ஆண் பிணம் கிடந்தது. செம்பனார்கோயில் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் அவர் குளிச்சாறு கிராமம் இடையான் தோப்பு தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் ராமச்சந்திரன் (30) என தெரிய வந்தது. இதையடுத்து செம்பனார்கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News February 3, 2026

மயிலாடுதுறை: 70% மானியத்தில் பம்புசெட் வேண்டுமா?

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில், 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு உழவன் <>App<<>> மூலமாக விண்ணப்பித்து, பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்.

News February 3, 2026

மயிலாடுதுறை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

டிஎன்பிஎஸ்சி குரூப் II, II a பதவிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வு வரும் பிப்.8-ம் தேதி மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. அதில் மாவட்டத்தை சேர்ந்த 86 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வர்கள் காலை 9 மணிக்குள்ளாகவும், பிற்பகல் 2 மணிக்குள்ளாகவும் தேர்வு கூடத்தில் இருக்க வேண்டும், எவ்வித எலக்ட்ரானிக் சாதனங்களும் எடுத்து வர அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News February 3, 2026

மயிலாடுதுறை: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

image

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் மயிலாடுதுறை மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!