News September 28, 2025
மயிலாடுதுறை: வங்கிக் கணக்கிலிருந்து திருடப்பட்ட பணம்

மயிலாடுதுறை கூறைநாட்டை சேர்ந்த ஸ்ரீசைலன்(78) என்பவரை மர்ம நபர் வங்கி மேலாளர் என கூறி கைபேசியில் தொடர்பு கொண்டு ஸ்ரீசைலன் மற்றும் அவரது மனைவியின் ஏ.டி.எம் எண் மற்றும் ஓடிபி எண்ணை கேட்டுள்ளார். விபரங்களை கூறியவுடன் ஸ்ரீசைலன் வங்கி கணக்கில் இருந்த ரூ. 8212, அவரது மனைவி கணக்கில் இருந்த ரூ.54,079 பணம் திருடு போனது அதிர்ச்சி அடைந்த ஸ்ரீசைலன் நேற்று பணத்தை மீட்டு தர வேண்டி எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்
Similar News
News January 1, 2026
மயிலாடுதுறை: 2025 மறக்க முடியாத நிகழ்வுகள்

மயிலாடுதுறையில் கடந்த 2025-ம் ஆண்டு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:
1. மயிலாடுதுறை பெண் காவலர் நாகையில் தற்கொலை
2. வைரமுத்து இளைஞர் ஆணவப் படுகொலை
3. மயிலாடுதுறை டிஎஸ்பி கார் பரிக்கப்பட்ட விவகாரம்
4. த.வா.க பிரமுகர் படுகொலை
5. டிட்வா புயலால் மழை வெள்ளம்
உங்கள் பகுதியில் நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வுகளை கமெண்ட் பண்ணுங்க!
News January 1, 2026
மயிலாடுதுறையில் 1337 சிசிடிவிகள் பொருத்தம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2025ம் ஆண்டில் 8 பெருங்கொள்ளை குற்ற வழக்குகள் உள்ளிட்ட 98 திருட்டு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் சம்பந்தப்பட்ட 104 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடு போன ரூ.81,82,000 மொத்த சொத்து மதிப்பில் ரூ.63,85,750 மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் புதிதாக 1337 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
News January 1, 2026
மயிலாடுதுறை: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE பண்ணுங்க!


