News December 20, 2025
மயிலாடுதுறை: லஞ்சம் வாங்கிய VAO கைது

தரங்கம்பாடி தாலுகா மேமாத்தூர் கேணிக்கரை தோப்பு தெரு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (30). இவருக்கு சொந்தமான பசுமாடு சமீபத்தில் பெய்த மழையில் உயிரிழந்தது. இந்நிலையில், இறந்த மாட்டிற்கு அரசு அளித்த நிவாரணத் தொகையை பெற்று கொடுத்ததற்கு விஏஓ ஜெயபிரகாஷ் லட்சம் கேட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
Similar News
News December 20, 2025
மயிலாடுதுறை: என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வேலை!

தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 575
3. வயது: 18
4. சம்பளம்: ரூ.12,524 – ரூ.15,028
5. கல்வித் தகுதி: டிப்ளமோ (Engineering or Technology)
6. கடைசி தேதி: 02.01.2026
7. விண்ணப்பிக்க: [<
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 20, 2025
மயிலாடுதுறை: மாணவிகளுக்கு ஆட்சியர் வாழ்த்து

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் களமாடு விளையாட்டு மற்றும் கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் உமாமகேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
News December 20, 2025
மயிலாடுதுறை: பெண்கள் தொழில் தொடங்க ரூ.10 லட்சம்!

மயிலாடுதுறை மாவட்ட பெண்களே சொந்தமாக தொழில் தொடங்க அரசு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது. TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு கல்வி தகுதி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுவும் இல்லை. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் <


