News November 4, 2025

மயிலாடுதுறை: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, குத்தாலம், செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் நேரடி தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்

Similar News

News November 4, 2025

மயிலாடுதுறை: ஒரே நாளில் பெறப்பட்ட 265 மனுக்கள்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். இதில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, உதவித்தொகை, வங்கி கடன், அடிப்படை வசதி, நில பிரச்சினை தொடர்பாக மொத்தம் 265 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

News November 4, 2025

மயிலாடுதுறை: பூச்சி மருந்து குடித்து தற்கொலை!

image

மேமாத்தூரைச் சேர்ந்தவர் குமார் (40) தொழிலாளி. இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன வேதனை அடைந்த அவர் பூச்சி மருந்தை குடித்தார். இதனால் மயங்கி விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

News November 3, 2025

தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்ற சௌமியா அன்புமணி

image

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதி 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மணி விழா நிகழ்வு தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாள் நிகழ்வான இன்று பசுமைத்தாயக தலைவர் சௌமியா அன்புமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்றார். ஆதீனம் அவருக்கு கோயில் பிரசாதம் நினைவு பரிசு வழங்கி ஆசி வழங்கினார்.

error: Content is protected !!