News August 31, 2025
மயிலாடுதுறை: ரூ.45,000 சம்பளத்தில் வேலை!

மயிலாடுதுறை இளைஞர்களே ரயில்வே வேலைக்கு செல்ல ரெடியா? ரயில்வே துறையில் மிக முக்கியமான பதவியான (RRB Section Controller) பதவிக்கு 368 பணியிடங்களுக்கு அறிவிப்பு வந்துள்ளது. எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,400 முதல் ரூ.45,000 வரை வழங்கப்படும். வயது வரம்பு 20 முதல் 33 வயது வரை உள்ளவர்கள் செப்டம்பர் 15-ம் தேதி முதல் <
Similar News
News September 1, 2025
மயிலாடுதுறை: அரசு வேலைக்கு இலவச பயிற்சி

தமிழ்நாடு கூட்டுறவுத்துறையின் கூட்டுறவு உதவியாளர், இளநிலை உதவியாளர் பணிகளுக்கான தேர்விற்கு விண்ணப்பித்திருக்கும் தேர்வர்கள் பயனடையும் வகையில் பூம்புகார் சாலை, பாலாஜி நகரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் இன்று முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. விருப்பமுடையோர் உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து பயனடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவர்க்கும் ஷேர் பண்ணுங்க
News September 1, 2025
மயிலாடுதுறை: மின் தடை அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் துணைமின் நிலையத்தில் வரும் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகையால் நீடூர், மணலூர், அனந்தமங்கலம், கொற்கை, கொற்றவநல்லூர், நடராஜபுரம், மல்லியகொல்லை, வில்லியநல்லூர், மேலமாத்தூர், கடுவங்குடி, கொண்டல் கங்கனாம்புத்தூர், அருவாப்பாடி, மொழையூர் உள்ளிட்ட பகுதிகளில் (செப்டம்பர் 2) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை என மின்வாரியம் அறிவித்துள்ளது.
News September 1, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோயில், பொறையார், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோந்து செல்லும் போலீசாரின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.