News April 23, 2025
மயிலாடுதுறை: ரூ.35,000 சம்பளத்தில் வேலை. இதை செய்தால் போதும்..

தேசியத் தலைநகர் பிராந்தியப் போக்குவரத்துக் கழகத்தில் (NCRTC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 9 பதவிகளின் கீழ் 72 காலிப்பணிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிப்ளமோ, ஐடிஐ & பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.18,250 முதல் 75,850 வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஏப்.24-க்குள் (நாளை) https://ncrtc.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE செய்யவும்!
Similar News
News November 5, 2025
புதிய அங்கன்வாடி கட்டிடம் திறந்து வைத்த எம்.எல்.ஏ

சீர்காழி ஊராட்சி ஒன்றியம் விளந்திட சமுத்திரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் பகுதி நேர அங்காடி கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குடிமைப் பொருட்கள் வழங்கி தொடங்கி வைத்தார். திமுக நிர்வாகிகள் பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.
News November 5, 2025
மயிலாடுதுறை: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு Apply!

மயிலாடுதுறை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!
News November 5, 2025
மயிலாடுதுறை: மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி சிறார் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் மாணவ மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பரிசோதனை விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.


