News October 6, 2025

மயிலாடுதுறை: மின்தடை அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவெண்காடு மற்றும் ஆச்சாள்புரம் துணை மின் நிலையத்தில் நாளை (07.10.20.2025) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளான திருவெண்காடு, பூம்புகார், வானகிரி, ஆச்சாள்புரம், கொள்ளிடம், புளியந்துறை, பழையார், புதுப்பட்டினம், மாதானம், வடவாமேடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி – மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. ஷேர் பண்ணுங்க

Similar News

News October 16, 2025

மயிலாடுதுறை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

திருத்தி அமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டு சம்பா சிறப்பு பருவம் நெல் ll பயிருக்கு காப்பீடு செய்யலாம். மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா சிறப்பு பருவ பயிருக்கு 277 கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. வருகிற 15.11.2025 வரை காப்பீடு செய்யலாம் காப்பீடு கட்டணமாக ஏக்கருக்கு ரூ. 547.50 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்

News October 16, 2025

மயிலாடுதுறை: ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

image

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 18-35(SC/ST-40, OBC-38)
6.ஆரம்ப தேதி: 21.10.2025
7.கடைசி தேதி: 20.11.2025
8. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK<<>> HERE . இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 16, 2025

மயிலாடுதுறை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

image

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 15-வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குளிச்சார் பகுதியை சேர்ந்த விமல்ராஜ், சாலமன், கலைவாணன் ஆகியோர் கடந்த 2021ஆம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் குற்றவாளிகள் மூவருக்கும் 11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி சத்தியமூர்த்தி தீர்ப்பளித்துள்ளார்.

error: Content is protected !!