News January 27, 2026
மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளுக்கு சிறப்பு விருது

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 9 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் கொள்ளிடம், மாங்கனம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, எடமணல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. சென்னையில் நடைபெற்ற விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயகுமார், தன்னார்வலர் ஜெனிஷா ஆகியோருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருது வழங்கி பாராட்டினார்.
Similar News
News January 30, 2026
மயிலாடுதுறை: விபத்தில் ஒருவர் பலி

செம்பனார்கோயில் ஆறுபாதி பாலவெளியை சேர்ந்தவர் வீராசாமி. தனியார் கல்லூரியில் கேண்டின் நடத்தி வரும் இவர், நேற்று முன்தினம் கேண்டினில் இருந்து தனது பைக்கில் வீட்டிற்கு சென்ற போது, பாலவெளி பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது கல்லூரி மாணவர் வெற்றிவேல் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில், வீராசாமி பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
News January 30, 2026
மயிலாடுதுறை: மின்தடை அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(ஜன.31) நடைபெற உள்ளது. இதன் காரணமாக பொறையார் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது எனவும் மின் நிறுத்தம் செய்யப்படும் எனவும் உதவி செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News January 30, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.29) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்


