News February 15, 2026

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

“பொதுமக்கள் ஆன்லைன் லோன் ஆப் மூலம் கடன் பெற முயற்சிக்க வேண்டாம். இதன் மூலம் உங்களது தகவல்களை உங்களிடமே பெற்று, உங்களது புகைப்படத்தை தவறாக சித்தரித்து தங்களது கான்டக்ட் லிஸ்டில் உள்ளவர்களுக்கு அனுப்பி விடுவோம் என மிரட்டி பணம் பறிக்க வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.” என்று மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News February 17, 2026

மயிலாடுதுறை: பேருந்துகள் மோதி விபத்து

image

வடலூரில் இருந்து காரைக்கால் நோக்கி நேற்று சென்று கொண்டிருந்த புதுச்சேரி அரசு பேருந்து ஒன்று, திருக்கடையூரில் பயணிகளை இறக்கி விட்டு புறப்படத் தயாரானது. அப்போது புதுச்சேரில் இருந்து காரைக்கால் நோக்கி வந்த தனியார் பேருந்து அரசு பேருந்தின் பின் மோதியது. இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து பொறையாறு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 17, 2026

மயிலாடுதுறை: மாமியாரை கொலை செய்த மருமகன்

image

பாலையூர் அடுத்த கோமல் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (60). இவர் தனது மனைவியுடன் கந்தமங்கலத்தில் உள்ள மாமியார் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டபோது, மாமியார் வசந்தா தடுக்க முயன்றுள்ளார். அப்போது பன்னீர்செல்வம் கட்டையால் தாக்கியதில் வசந்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பாலையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 17, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (பிப்.16) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!