News October 8, 2025

மயிலாடுதுறை: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

பொதுமக்கள் இணையதளத்தை பயன்படுத்தும் போது வரும் தேவையற்ற செயலிகளை தங்களது தொலைபேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம், இதன் மூலம் உங்களது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம். எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படி மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

Similar News

News October 16, 2025

மயிலாடுதுறை: வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை

image

வருகிற 20-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான முறையில் தீபாவளி பண்டி கையை கொண்டாடுவதை உறுதி செய்யும் வகையில் நேற்று சீர்காழி நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கொள்ளிடம் முக்கூட்டு, மணிக்கூண்டு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு கண்டறியும் மற்றும் அகற்றும் படையினர் சோதனை மேற்கொண்டனர்

News October 16, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இரவு முதல், காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 15, 2025

மயிலாடுதுறை: உணவுத் தொழிற்சாலையில் ஆய்வு

image

மயிலாடுதுறை வட்டம் குளிச்சார் கிராமம் சிட்கோ தொழிற்பேட்டையில், மாவட்ட தொழில் மையம் மூலம் வங்கி கடனுதவி பெற்று இயங்கும் உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனத்தை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் பார்வையிட்டார். தொழில் வளர்ச்சி நிலையை ஆய்வு செய்து, திட்டத்தின் பயன்கள் குறித்து தொழில் முனைவோரிடம் கேட்டறிந்தார்.

error: Content is protected !!