News October 6, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

வங்கியில் இருந்து பேசுவதாகவும் குறைந்த வட்டியில் உடனடியாக லோன் தருவதாகவும் பொதுமக்கள் தங்கள் மொபைல் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தி உள்ளது. மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
Similar News
News October 16, 2025
மயிலாடுதுறை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

திருத்தி அமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டு சம்பா சிறப்பு பருவம் நெல் ll பயிருக்கு காப்பீடு செய்யலாம். மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா சிறப்பு பருவ பயிருக்கு 277 கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. வருகிற 15.11.2025 வரை காப்பீடு செய்யலாம் காப்பீடு கட்டணமாக ஏக்கருக்கு ரூ. 547.50 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்
News October 16, 2025
மயிலாடுதுறை: ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 18-35(SC/ST-40, OBC-38)
6.ஆரம்ப தேதி: 21.10.2025
7.கடைசி தேதி: 20.11.2025
8. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 16, 2025
மயிலாடுதுறை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 15-வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குளிச்சார் பகுதியை சேர்ந்த விமல்ராஜ், சாலமன், கலைவாணன் ஆகியோர் கடந்த 2021ஆம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் குற்றவாளிகள் மூவருக்கும் 11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி சத்தியமூர்த்தி தீர்ப்பளித்துள்ளார்.