News April 18, 2024

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை தகவல்

image

மயிலாடுதுறையில் 100% வாக்கு பதிவு நடைபெற வேண்டி காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயக கடமை நிறைவேற்றுவதற்கு வெளி மாவட்டத்தில் இருந்து இம்மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் 265 காவலர்களுக்கு தபால் ஓட்டும் , 425 காவலர்களுக்கு தேர்தல் பணி சான்றை பயன்படுத்தி அவர்கள் பணிபுரியும் இடத்திலேயே வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 18, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் நேற்று(அக்.17) இரவு 11 மணி முதல், இன்று(அக்.18) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 17, 2025

மயிலாடுதுறை: விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடக்கம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், மாசற்ற தீபாவளி பண்டிகை விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வழங்கினார். உடன் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

News October 17, 2025

மயிலாடுதுறை: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா ?

image

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> செய்து உழவன் செயலி மூலம் Apply செய்யவும். மேலும் விபரங்களுக்கு வட்டார வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை நேரில் அணுகவும். தகவலை ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!