News March 23, 2024
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை தகவல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் அமலுக்கு வந்த நாளிலிருந்து இதுவரை 102 மதுவிலக்கு குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு 103 நபர்களை கைது செய்யப்பட்டும், 3,663 லிட்டர் பாண்டி சாராயம், 91 லிட்டர் அயல் மாநில மதுபானங்கள், 40 லிட்டர் தமிழ்நாடு மதுபானங்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதன் மொத்த மதிப்பு ரூ.2,34,552/- என மாவட்ட காவல்துறை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 1, 2025
மயிலாடுதுறை: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 1, 2025
மயிலாடுதுறை: கனமழையால் இடிந்து விழுந்த சுவர்!

கொள்ளிடம் ஒன்றியம் கீழவல்லம் பகுதியில் வசித்து வரும் ஆனந்தன் -பவானி என்பவரது தொகுப்பு வீட்டின் முகப்பு சுவர் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் இன்று காலை இடிந்து விழுந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்க்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் சென்று பார்வையிட்டார். அவரிடம் கடந்த ஆண்டு ஆனந்தன் இறந்து விட்ட நிலையில் தற்பொழுது வீடு சேதமடைந்துள்ளதால் நிவாரணம் பெற்றுத்தர கோரிக்கை விடுத்துள்ளார்.
News December 1, 2025
மயிலாடுதுறையில் கொட்டித்தீர்த்த கனமழை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. நேற்று நள்ளிரவு வரை இடைவிடாது மழை பெய்த நிலையில் இன்று காலை முதல் சற்று மழை ஓய்ந்துள்ளது. நேற்று காலை முதல் இன்று காலை 6.30 மணி வரையிலான நிலவரப்படி அதிகபட்சமாக சீர்காழியில் 41.30 மிமீ மழை பெய்துள்ளது மயிலாடுதுறையில் 23.50மிமீ மணல்மேட்டில் 22மிமீ, கொள்ளிடத்தில் 36மிமீ, தரங்கம்பாடியில் 29.50மிமீ, செம்பனார் கோயிலில் 24மிமீ பதிவாகியுள்ளது


