News March 27, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

Whatsapp, Facebook, Instagram போன்ற சமூக வளையதளங்களில் அறிமுகமில்லாத நபர்களிடம் பேசும்போதோ சாட்டிங் செய்யும்போது எச்சரிக்கையாக இருங்கள். படங்கள் மற்றும் குரல் பதிவுகளை பதிவு செய்து அவற்றை வேறு வகையில் உங்களுக்கு எதிராக பயன்படுத்துவார்கள். சந்தேகப்படும் நபர்கள் மீது காவல் நிலையத்தில் ஹெல்ப் லைன் நம்பர் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்கவும் காவல்துறை கேட்டுக்கொண்டது. Share செய்யுங்கள்
Similar News
News April 2, 2025
வைத்தீஸ்வரர் ஆலயம் சென்றால் முன்னேற்றம் உண்டு

மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில் எனும் ஊரில் வைத்தீஸ்வரன் ஆலயம் உள்ளது. இங்கு சென்று மூலவரான சிவனை வழிபட்டு, அங்குள்ள செவ்வமுத்துக்குமரர் சன்னதியில் உள்ள முருகனை வழிபட்டால், தொழில் தொடங்கி விரக்தியில் இருப்பவர்களின் கஸ்டங்கள் நீங்கும். மேலும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுமென நம்பப்படுகிறது. உடனே உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு SHARE செய்து அவர்களது முன்னேற்றத்திற்கு நீங்களும் உதவுங்கள்.
News April 2, 2025
மயிலாடுதுறையில் மழைக்கு வாய்ப்பு

கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில், மயிலாடுதுறையில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News April 2, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

வேலை தேடும் இளைஞர்களை கவரும் வகையில் பகுதி நேர வேலை மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்து போலியான செய்திகள் ஆன்லைனில் உலவி வருகின்றன. அந்த செய்திகளை நம்பி யாருக்கும் பணம் அனுப்பி ஏமாந்து விடாதீர்கள் என மயிலாடுதுறை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளது. Share செய்யுங்கள்.