News September 27, 2025
மயிலாடுதுறை: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

மயிலாடுதுறை, குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக பல போலியான ஆன்லைன் நிறுவனங்கள் விளம்பரம் செய்து வருகின்றனர். பொதுமக்கள் அவற்றை நம்பி முன் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளது. இதுபோன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
Similar News
News January 8, 2026
மயிலாடுதுறை: போஸ்ட் ஆபீஸில் வேலை!

மயிலாடுதுறை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு <
News January 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் 5414 வழக்குகள் பதிவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2025ஆம் ஆண்டில் மதுவிலக்கு குற்றங்கள் தொடர்பாக 5414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5473 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 46 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 14 பேர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மதுவிலக்கு குற்றங்களின் ஈடுபடுபவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி தெரிவித்துள்ளார்
News January 8, 2026
மயிலாடுதுறை: கனமழை எச்சரிக்கை; கலெக்டர் அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்டத்தில், வருகிற ஜன.9 மற்றும் 10 தேதிகளில் கடுமையான மழைப்பொழிவு வர உள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் மின் கம்பங்கள் மற்றும் பழைய கட்டிடங்கள் அருகே நிற்க வேண்டாம், மழையில் நனையாமல் தானியங்களை பாதுகாப்பான முறையில் வைத்திருக்க வேண்டும், கால்நடைகளை மின்கம்பங்கள் அருகில் செல்லாமல் பாதுகாக்க தெரிவித்துள்ளார்.


