News June 14, 2024
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், அலுவலர்கள் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வருகின்ற ஜூன் 19 காலை 9 மணி முதல் ஜூன் 20 காலை 9 மணி வரை தரங்கம்பாடி வட்டத்தில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்ய உள்ளனர். எனவே இன்று முதல் பொதுமக்கள் கிராமங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலர்களிடம் மனுவை வழங்கி பயன்பெறுமாறு ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News March 2, 2026
மயிலாடுதுறை: அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி கோமல் ஊராட்சிக்கு உட்பட்ட மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகினர். அதனைத் தொடர்ந்து அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் முன்னிலையில், அவரது இல்லத்தில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். இந்நிகழ்வில், அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் புதிய உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
News March 2, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.01) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.02) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.
News March 1, 2026
மயிலாடுதுறை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!


