News November 24, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் 296.60 மிமீ மழை பதிவு

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் மேலடுக்க சுழற்சி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இருதினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 76.80 மிமீ சீர்காழியில் 69 மிமீ மயிலாடுதுறையில் 45 மிமீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 24, 2025
மயிலாடுதுறை: மீண்டும் கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.24) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 24, 2025
மயிலாடுதுறை: மீண்டும் கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.24) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 24, 2025
மயிலாடுதுறை: பருவமழை குறித்து எச்சரிக்கை

தற்போது மழைக்காலம் என்பதாலும் நீர்நிலைகள் நிரம்பும் அபாயம் உள்ளதாலும் சிறுவர்களை ஏரி குளம் மற்றும் நீர் நிரம்பிய பகுதிக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொது மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட காவல் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.


