News November 17, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கன மழை அளவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையின் அளவுகள் வெளியாகியுள்ளது. இதில் நேற்று காலை எட்டு முப்பது மணி முதல் இன்று காலை ஆறு முப்பது மணி வரை மயிலாடுதுறை 55.80 மி.மீ, மணல்மேடு 20.00 மி.மீ, சீர்காழி 64.80 மி.மீ, கொள்ளிடம் 65.20 மி.மீ, தரங்கம்பாடி 57.60 மி.மீ , செம்பனார்கோவில் 93 .40 மில்லி மீட்டர் அளவுகளில் மழை பெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 17, 2025
மயிலாடுதுறை: மழையா? இதை மறக்காதீங்க!

மயிலாடுதுறை மக்களே தமிழகத்தில் பருவமழை தொடங்கி தீவிரமடைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மழையால் பவர் கட், மின்கம்பி அறுந்து விழுவது, பியூஸ் போவது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம். ‘94987 94987’ என்ற மின்வாரிய உதவி எண்னை தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் தமிழகத்தில் எங்கு இருந்தாலும் பழுது நீக்கி தரப்படும்! SHARE
News November 17, 2025
மயிலாடுதுறை: கஞ்சா கடத்திய 3 இளைஞர்கள் கைது

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே ஆத்துப்பக்கம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மூன்று இரு சக்கர வாகனத்தில் வந்த சக்தி , விக்னேஷ் மற்றும் ஹரிகரன் ஆகியோரை சோதனை செய்ததில் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 3.300 கிலோ கஞ்சாவை பொறையார் போலீசார் பறிமுதல் செய்தனர்.
News November 17, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.


