News October 13, 2025
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மழை அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் அக்.15,17,18-ல் புதுகை, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட , மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் சற்று எச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 7, 2025
மயிலாடுதுறை: கொலையாளியை வலை வீசி தேடும் போலீசார்

வைத்தீஸ்வரன் கோவில் அருகே திருப்புன்கூரில் காய்கறி கடைக்கு நேற்று குடிபோதையில் காய்கறி வாங்க வந்த சந்திரசேகர் தக்காளி விலை கேட்டு கடை உரிமையாளர் ராஜாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கிருந்த தராசால் ராஜாவை பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் உடலை கைப்பற்றி சந்திரசேகரை வலை வீசி தேடி வருகின்றனர்
News December 7, 2025
மயிலாடுதுறை: ஆடு, கோழி பண்ணை அமைக்க வேண்டுமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News December 7, 2025
மயிலாடுதுறையில் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய தொழிற் பழகுனர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் மூவலூர் ஏழுமலையான் தனியார் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நாளை திங்கட்கிழமை காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது. முகாமில் அரசு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்கள் பங்கேற்று ஐடிஐ பயிற்சி பெற்றவர்களை தேர்வு செய்ய உள்ளனர். ரூ.8000 முதல் உதவி தொகை வழங்கப்படும்.


