News December 14, 2025
மயிலாடுதுறை: மனைவியை தீ வைத்து கொளுத்திய கணவர்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதித்யன். இவரது மனைவி பிரேமா. இருவருக்கும் சமீபகாலமாக குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த தகராறின் போது கோபமடைந்த ஆதித்யன் தனது மனைவி மீது டீசலை ஊற்றி கொளுத்தி உள்ளார். அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆதித்யனை குத்தாலம் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 18, 2025
மயிலாடுதுறை: வேளாண் கூட்டுறவு சங்கத்தில் வேலை

தென்னிந்திய பல மாநில வேளாண் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (SIMCO)-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 52
3. வயது: 21 – 41
4. சம்பளம்: ரூ.5,200 – ரூ.28,200
5. கல்வித் தகுதி: 10th, 12th, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 20.01.2026
7. மேலும் அறிந்துகொள்ள: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 18, 2025
மயிலாடுதுறை: வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

மயிலாடுதுறை மக்களே, உங்கள் VOTER ID பழசாவும், சேதமடைந்தும் காணப்படுகிறதா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாற்ற இதை பண்ணுங்க..
1. <
2. உங்க VOTER ID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
3. இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.
மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.
News December 18, 2025
மயிலாடுதுறை: ஊராட்சி செயலர்கள் மாற்றம்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டாரத்தில் உட்பட்ட கழனிவாசல், கிளியனூர், பெருமாள்கோவில், அசிக்காடு, பேராவூர், காஞ்சிவாய், பாலையூர், மாதிரிமங்கலம், கடக்கம், கொடவிளாகம் உள்ளிட்ட 10 ஊராட்சிகளின் ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளது. மேலும் பணியில் மாற்றம் செய்த ஊராட்சிகளுக்கு புதிய ஊராட்சி செயலர்களை நியமனம் செய்து குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சோபனா உத்தரவிட்டுள்ளார்.


