News September 27, 2025

மயிலாடுதுறை மக்களே குறைந்த விலை! ஏமாறாதீங்க!

image

மயிலாடுதுறை மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக பல போலியான ஆன்லைன் நிறுவனங்கள் விளம்பரம் செய்து வருகின்றனர். பொதுமக்கள் அவற்றை நம்பி முன் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளது. இதுபோன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News January 5, 2026

மயிலாடுதுறை: அடிக்கல் நாட்டு விழா

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் முழு நேர கிளை நூலகம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு நூலகத்திற்கு அடிக்கல் நாட்டை பணிகளை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், மயிலாடுதுறை எம்பி சுதா, எம்எல்ஏ நிவேதா எம் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

News January 5, 2026

மயிலாடுதுறை: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News January 5, 2026

மயிலாடுதுறை: மேம்பாலம் நாளை திறப்பு!

image

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை கும்பகோணம் மார்க்கம் காவேரி நகர் பகுதியில் மொழிப்போர் தியாகி மாணவ மணி சாரங்கபாணி மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலம் சிதிலமடைந்து காணப்பட்டதால் தற்பொழுது மேம்பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் நாளை டிசம்பர் 5ஆம் தேதி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.

error: Content is protected !!