News September 27, 2025

மயிலாடுதுறை மக்களே குறைந்த விலை! ஏமாறாதீங்க!

image

மயிலாடுதுறை மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக பல போலியான ஆன்லைன் நிறுவனங்கள் விளம்பரம் செய்து வருகின்றனர். பொதுமக்கள் அவற்றை நம்பி முன் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளது. இதுபோன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News January 9, 2026

மயிலாடுதுறையில் 2,87,390 பேருக்கு ரூ.3000!

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் 42 கடைகள், மீன்வளத்துறையின் கீழ் செயல்படும் 11 கடையில், மகளிர் கடைகள் உட்பட மொத்தம் 443 நியாய விலை கடைகள் வாயிலாக பயன்பாட்டில் உள்ள 2,87,390 குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூ.89.49 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுமென மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 9, 2026

மயிலாடுதுறை: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர், ஆக்கூர், பொறையாறு, திருவிளையாட்டம் ஆகிய வேளாண்மை விரிவாக்க மையங்களில், உளுந்து விதை உயிர் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விதை மற்றும் உயிர் உரங்கள் தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதார் நகல், நில ஆவண நகல்களை கொடுத்து, உளுந்து விதை மானியத்தில் பெறலாம் என செம்பனார்கோயில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News January 9, 2026

மயிலாடுதுறை மக்களே உஷார் – காவல்துறை எச்சரிக்கை!

image

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் வலைதளத்தில், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும்போது கவனமாக இருக்க வேண்டும். பல போலியான நபர்கள் போலியான புகைப்படங்கள் மற்றும் விபரங்களை பதிவு செய்து, உங்களை ஏமாற்றி உங்களிடமிருந்து பணம் பறிக்க வாய்ப்பு உள்ளது. இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரித்துள்ளனர்.

error: Content is protected !!