News January 9, 2026
மயிலாடுதுறை மக்களே உஷார் – காவல்துறை எச்சரிக்கை!

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் வலைதளத்தில், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும்போது கவனமாக இருக்க வேண்டும். பல போலியான நபர்கள் போலியான புகைப்படங்கள் மற்றும் விபரங்களை பதிவு செய்து, உங்களை ஏமாற்றி உங்களிடமிருந்து பணம் பறிக்க வாய்ப்பு உள்ளது. இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரித்துள்ளனர்.
Similar News
News January 10, 2026
மயிலாடுதுறை: அரசுப் பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

மயிலாடுதுறை மக்களே, பொங்கல் பண்டிக்கைக்கு வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு அரசுப் பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
4. இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 10, 2026
மயிலாடுதுறை: புதிய ஐஜி பொறுப்பேற்பு – எஸ்.பி வாழ்த்து

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக வே. பாலகிருஷ்ணன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பும் காவல்துறை தலைவராக பணியாற்றி உள்ளார். இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற காவல் உயர் அதிகாரிக்கு, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. ஸ்டாலின் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
News January 10, 2026
மயிலாடுதுறை: சிறுமியை திருமணம் செய்தவர் கைது

செம்பனார்கோவில் அருகே திருச்சம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மெய்யப்பன் (25). இவர் 17 வயது மாணவி ஒருவரை கடந்த 6-ந் தேதி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் மெய்யப்பனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்


