News November 23, 2025
மயிலாடுதுறை மக்களே இதை SAVE பண்ணிகோங்க!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் வெள்ளம், இடி, மின்னல் போன்ற இயற்கை இடர்பாடுகள் தொடர்பாக தகவல் தெரிவிக்க மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 04364 222588, கட்டணமில்லா தொலைபேசி எண் 04364 1077, மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 9442626792 ஆகியவற்றிற்கு தொடர்பு கொள்ளலாம்
Similar News
News November 24, 2025
மயிலாடுதுறை: பருவமழை குறித்து எச்சரிக்கை

தற்போது மழைக்காலம் என்பதாலும் நீர்நிலைகள் நிரம்பும் அபாயம் உள்ளதாலும் சிறுவர்களை ஏரி குளம் மற்றும் நீர் நிரம்பிய பகுதிக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொது மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட காவல் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
News November 24, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் 296.60 மிமீ மழை பதிவு

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் மேலடுக்க சுழற்சி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இருதினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 76.80 மிமீ சீர்காழியில் 69 மிமீ மயிலாடுதுறையில் 45 மிமீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 24, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் 296.60 மிமீ மழை பதிவு

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் மேலடுக்க சுழற்சி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இருதினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 76.80 மிமீ சீர்காழியில் 69 மிமீ மயிலாடுதுறையில் 45 மிமீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


