News September 16, 2025
மயிலாடுதுறை மக்களே அவங்க மறுபடியும் வராங்க

மயிலாடுதுறை மக்களே இன்று 16.09.2025 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!
✅மயிலாடுதுறை
பால லட்சுமி திருமண மண்டபம், திருமஞ்சன வீதி,
✅சீர்காழி
நாடார் உறவின் முறை திருமண மண்டபம்,
✅செம்பனார்கோயில்
தனச்செல்வி திருமண மண்டபம், திருவிளையாட்டம்
✅கொள்ளிடம்
ஜம் ஜம் மஹால், ஆனைகாரன்சத்திரம்
அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News September 16, 2025
மயிலாடுதுறையில் குழந்தைகளுக்கு உதவி தொகை

மயிலாடுதுறையில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கும் அன்பு கரங்கள் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் குழந்தைகளின் 18 வயது வரை இடைநில்லாமல் கல்வி தொடர உதவித்தொகை வழங்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் முதற்கட்டமாக 45 ஆண் குழந்தைகளுக்கும் 43 பெண் குழந்தைகளுக்கும் என மொத்தம் 88 குழந்தைகளுக்கு உதவி தொகைக்கான அடையாள அட்டைகள் நேற்று வழங்கப்பட்டது.
News September 16, 2025
மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலம் மூடப்படவில்லை

மயிலாடுதுறை காவிரி நகர் ரயில்வே மேம்பாலம் பழுதடைந்ததால் மூன்று மாதங்களுக்கு அவ்வழியாக போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக நேற்று தகவல் பரவியது. இந்நிலையில் நேற்று சிறிது நேரம் போக்குவரத்தை துண்டித்து சோதனை மட்டுமே நடைபெற்றது. தற்பொழுது மேம்பாலம் மூடப்படவில்லை பராமரிப்பு பணிக்காக முறையான அறிவிப்பு முன்னதாகவே கொடுக்கப்பட்ட பின்னரே மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News September 16, 2025
மயிலாடுதுறை கலெக்டர் நேரில் ஆய்வு

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீட்டிற்கு வீடு தூய்மை பணியாளர்கள் மூலம் குப்பை சேகரிப்பு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குப்பைகளை பொதுமக்கள் தரம் பிரித்து கொடுக்கிறார்களா என தூய்மை பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.