News November 3, 2025
மயிலாடுதுறை: போக்ஸோ வழக்கில் ஆசிரியர் கைது

மயிலாடுதுறை சித்தர்காட்டை சேர்ந்த சாம்சங் பிரபாகரன்(54) மயிலாடுதுறை அரசு உதவி பெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார். இந்நிலையில் பள்ளியில் 8ஆம் வகுப்பு முடித்த 14வயது மாற்றுத்திறனாளி மாணவி 5மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. தகவலறிந்த மயிலாடுதுறை மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தியதில் இதற்கு கரணம் உடற்கல்வி ஆசிரியர் என தெரியவர போலிசார் அவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
Similar News
News November 3, 2025
மயிலாடுதுறை: பள்ளியில் ஆய்வு செய்த ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் வட்டம் ஆறுபாதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை ருசித்து பார்த்து அதன் தரத்தை ஆய்வு செய்தார். ஆய்வின்போது மகளிர் திட்ட அலுவலர் சீனிவாசன் உடன் இருந்தார்
News November 3, 2025
மயிலாடுதுறை: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். ஷேர் பண்ணுங்க!
News November 3, 2025
மயிலாடுதுறை: விரைவு ரயில் வழித்தடம் மாற்றம்

மயிலாடுதுறையிலிருந்து செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் நவம்பர் 1, 8 ,11, 15, 18 ஆகிய தேதிகளில் சனிக்கிழமைகளில் மட்டும் மதுரை, திண்டுக்கல் வழிக்கு பதிலாக காரைக்குடி மானாமதுரை வழியாக செங்கோட்டை செல்லும். செங்கோட்டையில் இருந்து நவம்பர் 5, 12, 19, 26 மற்றும் புதன்கிழமைகளில் மட்டும் மதுரை, திண்டுக்கல், மணப்பாறை வழியாக மயிலாடுதுறை வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


