News December 26, 2025
மயிலாடுதுறை: போக்சோ கைதி குண்டாசில் கைது!

நெடுவாசலை சேர்ந்த ஆனந்தராஜ் (40) என்பவர் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சீர்காழி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் செய்து கைது செய்தனர். இந்நிலையில் ஆனந்தராஜ் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், ஆனந்தராஜை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 31, 2025
மயிலாடுதுறை: குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில், சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட பாண்டிச்சேரி மதுபான பாட்டில்களை கடத்திய, காரைக்கால் நெய்வேச்சேரி பெரியார் நகரை சேர்ந்த கார்த்திகேயன்(44) என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் இவர் தொடர் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
News December 31, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (டிச.30) இரவு 10 முதல் இன்று(டிச.31) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News December 31, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (டிச.30) இரவு 10 முதல் இன்று(டிச.31) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


