News January 18, 2025
மயிலாடுதுறை: பொங்கல் பண்டிகையையொட்டி 33 பேர் கைது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சட்டவிரோத மது விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டதன்படி, மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில், கடந்த 4 நாட்களில் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து 1,489 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Similar News
News August 16, 2025
சீர்காழியில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம்

சீர்காழி ஜெயின் சங்கம், தனியார் பண்ட் மற்றும் பாண்டிச்சேரி தனியார் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் சர்க்கரை பரிசோதனை முகாம் நாளை (ஆக.17) சீர்காழி சுபம் திருமண மண்டபத்தில் காலை 8:00 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற அழைப்பு விடுத்துள்ளனர்.
News August 16, 2025
மயிலாடுதுறை: வங்கி வேலை! APPLY பண்ணுங்க

பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் 250 வெல்த் மேனேஜர் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எம்.பி.ஏ., மற்றும் PGDBA/PGDBM/PGPM/PGDM டிப்ளமோ முடித்த 25 வயது நிறைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள் இந்த<
News August 16, 2025
மயிலாடுதுறை மக்களே இத தெரிஞ்சிக்கோங்க!

மயிலாடுதுறை மாவட்டம் தமிழகத்தில் முக்கிய மாவட்டமாக விளங்கிவருகிறது. இம்மாவட்டத்தில் மொத்தமாக
▶️ 3 சட்டமன்ற தொகுதிகள்
▶️ 1 பாராளுமன்ற தொகுதி
▶️ 287 வருவாய் கிராமங்கள்
▶️ 241 கிராம பஞ்சாயத்துகள்
▶️ 5 ஊராட்சி ஒன்றியங்கள்
▶️ 2 வட்டங்கள்
▶️ 2 கோட்டங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.